வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை – மத்திய அரசு அறிவிப்பு.!

Default Image

வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சர்வதேச பயணிகள் இந்தியா வர தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதேபோல் 10 வயத்துக்குட்பட்டவர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

இதையடுத்து குழந்தைகள், முதியவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவசர அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில் மற்றும் விமான கட்டணம் சலுகை ரத்து என மத்திய அரசு கூறியுள்ளது. தனியார்துறை நிறுவனத்தின் பணிபுரிபவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI
TVK Leader Vijay