இயற்கை வேளாண்மை செய்ய ஆர்வமா..?? வாருங்கள் திருவள்ளூர் நோக்கி……

Default Image
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன.

அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை.

இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் உள்ளன. இயற்கை வளமான மண், பல குட்டைகள், கிணறு, இயற்கை உரம் என இயற்கையோடு இணைந்த பண்ணையாகும்.

இங்கு நடைபெறும் விவசாயத்தில் வேதியியல் ரசாயன உரங்களோ மற்றும் பூச்சி மருந்துகளோ பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு 50 மாடுகள், ஆடுகள், கோழிகள், வாத்து, ஒட்டகம், குதிரை என பல வகை உயிரினங்கள் வளர்க்கப்பட்டு அவற்றின் எச்சங்களை உரமாகப் பயன்படுகிறது. மேலும் இங்கு சூரியசக்தியின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த படுகிறது.

இங்கு விளையும் விவசாய பொருட்கள் மிகக்குறைந்த விலையில் எடை போட்டு விலைக்கு தருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்க்கின்றனர்.இப்பண்ணையை சுற்றிலும் மரவேலி அமைத்துள்ளனர். இயற்கை உரம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பண்ணை இப்பண்ணையாகும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயற்கை பண்ணையை பார்வையிட்டுப் பயன்பெறலாம். பழங்கள் வாங்கிச் செல்லலாம்.
முழு விபரம் பெற:–
பாரதி, லியோ இயற்கை வேளாண் பண்ணை,
தேன்சிட்டி குழுமம், காவேரி ராஜபுரம், திருவள்ளூர் மாவட்டம்,
செல்: 99400 17635

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்