கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Default Image

கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் சர்ச்சை கருத்தால் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 மணியளவில் மர்மநபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அது இரண்டுமே அலுவலகத்தை எந்த சேதமும் செய்யவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து  சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக இருக்கும் போலீசாரை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்