இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Default Image

சென்னை வண்ணாரப்பேட்டையில் 32 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், சிஏஏ சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக கூட்டணி எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது என்றும் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். மேலும் COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிப்பதால் CAA-வுக்கு எதிரான போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள COVID-19 வைரஸ் பாதிப்பு காரணமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து ஷாஹின்பாக் போராட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்