கொரோனாவில் இருந்து தப்பிக்க புதிய வழி ! மாட்டு சிறுநீரை குடித்த இந்து மகா சபா நிர்வாகிகள்

Default Image

கொரோனாவிலிருந்து  பாதுகாத்துக்கொள்ளும் விதமாக  மாட்டுச் சிறுநீர் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இடையில் டெல்லியில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் சார்பில் நிகழ்ச்சி ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டது.அதாவது கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாட்டு சிறுநீர் குடிக்கும் நிகழ்ச்சி ஆகும்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கொரோனாவில் இருந்து  பாதுகாத்துக் கொள்ள மாட்டுச் சிறுநீர் குடித்தனர் .இது தொடர்பான வீடியோ சமுக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்