பழனியை திருப்பதி போல் மாற்றப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Default Image

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், திருப்பதி போல் பழனி கோயிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் கோயிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்