தேர்தலையொட்டி பதுக்கி வைத்த மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்த போலீசார்.. !!

Default Image

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற  21-ம் தொடக்கி 29-ம் தேதி வரை  4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி  அங்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில்  உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.இதையெடுத்து  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் , நாட்டுச் சாராயம் காய்ச்சப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பீப்பாய்களில் இருந்த நாட்டுச் சாராயம் மற்றும் மூலப் பொருட்களை அழித்தனர். மேலும் பெட்டி பெட்டியாக இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்