கேரளா இடது முன்னணி முதல்வரை சந்தித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்…!

கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனை இந்திய கிரிகெட்டின் இதிகாச நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன், இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் அலுவலகத்தில் சந்தித்தார்….கேரள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியின் உரிமையாளரான டெண்டுல்கர், கேரளத்தில் ஒரு சர்வதேச தர்ம வாய்ந்த, கால்பந்து அகாடமி அமைப்பது குறித்து முதல்வருடன் விவாதித்தார்.

சங்கிகள் தோழர் பிணராயி விஜயனை தேசத்துரோகி என்று கூறி நாடெங்கிலும் அவருக்கு எதிராக வெறுப்பரசியலை பரப்பி வரும் நிலையில், இதுபோன்று விளையாட்டு, கலை, பண்பாட்டுத்துறைகளில் செயல்படுபவர்கள் அவருடன் பல்வேறு பொதுநலச் செயல்பாடுகளில் இணக்கமாகச் செயல்பட முன்வருவது குறிப்பிடத்தகுந்தது…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment