கொரோனாவால் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவிப்பு..

Default Image

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் ஒரு  கோவிலில்  காசி விஸ்வநாதர் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவித்து உள்ளனர்.

இதுபற்றி அந்த கோவிலின் பூசாரி கூறுகையில் ,தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காசி விஸ்வநாதருக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.யாராவது சிலையை தொட்டால் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி மக்களை பாதிப்படைய கூடும் என கூறினார்.

இந்த கோவிலில் பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்