திமுக எம்.எல்.ஏ வெற்றி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Default Image

கடந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசரணைக்கு இன்று வந்தது. அப்போது  திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீதாபதியின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்