Breaking:ஆட்கொல்லி கொரோனாவால் கேரளாவில் தியேட்டர்கள் மூட முடிவு..!

Default Image

இன்று கொச்சியில் மலையாள திரையுலகம் அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை கேரளாவில்  தியேட்டர்கள் அனைத்தும்  மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து நேற்று கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த குழந்தை பெற்றோருடன் இத்தாலி சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று  மாவட்ட அதிகாரிகளுடன் கே.கே.ஷைலஜா ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் பத்தினம் திட்டா மாவட்டம் மூன்று நாட்களுக்கு விடுமுறை என கலெக்டர் நூஹூ நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்