திறமை இருந்தும் பணம் இல்லை.! சாதிக்கத் துடிக்கும் இளைஞர்.!

Default Image

திருவள்ளூர் மாவட்டம் சோழிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பருக்கு பிறவில்லையே பார்வை குறைபாடு கொண்டவர். 10ம் வகுப்பு படித்திருக்கும் இவர், மூட்டை தூக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இருப்பினும் இவர் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய நிலையில், ஜூடோ விளையாட்டில் பயிற்சி எடுத்துள்ளார். இதையடுத்து பல போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர், தற்போது பிரிட்டனில் நடக்கவுள்ள பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து மனோகரன் கூறுகையில், ஜூடோ போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தரவரிசையில் 31வைத்து இடத்தில் இருக்கும் எனக்கு, ஜப்பானியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவதே லட்சியம் என்றும் ஆனால் அதில் பங்கேற்பதற்கு முன்னாள், தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டும். இதற்காக நான் பிரிட்டன் செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு போதிய பணம் வசதி இல்லை என்றும் அரசு உதவி செய்தல் நிச்சியமாக இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை பெற்று தருவேன் என்று கூறியுள்ளார். இதனிடையே மனோகரன் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஜூடோ பயிற்சி அளித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்