தமிழக பெண்கள் இரவு 12 மணிக்கும் ஆபரணங்கள் அணிந்து உலா வரலாம்…. அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்…

Default Image

சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி  சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஔவையாரின் சிலைக்கு தமிழக அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர்   ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு 12 மணிக்கும் பெண்கள் நகைகளை அணிந்து பாதுகாப்பாக உலாவலாம் என்றும் கூறினார். மேலும் கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும்  கொரோனா குறித்து பொதுமக்கள் வீணாக பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்