மேகாலயாவில் புதிய திருப்பமாக தேசிய மக்கள் கட்சி ஆட்சி?

Default Image

பா.ஜ.க. ஆட்சி  மேகாலயாவில் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய திருப்பமாக அக்கட்சியின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறது.

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும், காங்கிரஸ் 21  இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது.

ஒருபுறம் அங்கு ஆட்சியை தக்க வைக்க 21 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் போராடி வந்த நிலையில், மற்றொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. தீவிரம் காட்டியது. பா.ஜ.க. கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய மக்கள் கட்சிக்கே ஆதரவு அளிக்க ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டான்குபர் ராய் முடிவு செய்துள்ளார். ஹெச்எஸ்பிடிபி (HSPDP) கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அக்கட்சியுடன் கைகோர்த்துள்ள 19 இடங்களை வென்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (Conrad sangma) ஆட்சி அமைக்க அழைக்குமாறு மேகாலய ஆளுநர் கங்கா பிரசாத்திடம் கடிதம் அளித்துள்ளார். வரும் 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு கான்ராட் சங்மா முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சிரமம் தான் என்ற போதிலும், தங்களுக்கு ஆதரவளித்துள்ள உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என தாம் நம்புவதாக சங்மா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்