4 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா.!

Default Image

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார். 

இதைத்தொடர்ந்து களமிறங்கி இந்திய அணி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 11 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களில் வெளியேறி, இந்திய அணி 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. தற்போது களத்தில் தீப்தி சர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் உள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்