சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார்.!

Default Image

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் வருமான வரித்துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகள் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்