சரிந்த திமுக இமயத்தின் சரித்திரம்… பேரா., க.அன்பழகன் குறித்த சிறப்புத் தொகுப்பு…

Default Image

அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் , ஸ்டாலின் என மூன்று தலைமைகளுடன் பணியாற்றிய பேராசிரியரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய்யுள்ளது. இவரை பற்றிய சிறப்பு தொகுப்பு…

பிறப்பு:

திமுக பொதுச்செயலாளர்  க. அன்பழகன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா.

கல்வி:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை  தமிழ் (ஹானர்ஸ்) பட்டம்  படித்தார்.பின்  1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.

குடும்பம்:

 இவர், 1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது  வாழ்க்கை துணையாக ஏற்று திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.

திராவிட வழியில் அன்பழகன்:

ஆன்பழகன் திராவிட சிந்தனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால், தனது ராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். அன்பழகன், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

வகித்த பதவிகள்:

  • 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார்.
  • 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார்.
  • 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
  • 1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
  • 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவினார்.

எழுத்தாளராக பேராசிரியர்:

  • சிறந்த எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும், நூல்களையும் க.அன்பழகன் எழுதி உள்ளார்.
  • இன-மொழி வாழ்வுரிமை போர்,
  • உரிமை வாழ்வு,
  • 1956,
  • பாரி நிலையம்,
  • தமிழர் திருமணமும் இனமானமும்,
  • தமிழின காவலர் கலைஞர்,
  • தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.

    இவரது மறைவு தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்