கார் விபத்தில் இறந்த 10 தமிழர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்..!

Default Image

இன்று அதிகாலை ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  10  தமிழ் பக்தர்கள்  கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதியுதவியை  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்