வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 56 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்