தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 15 பேரும் இன்று ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜாகுவார் தங்கம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தகோபால், வங்கி கணக்குகளை ஜாகுவார் தங்கம் கையாளக் கூடாது என உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஜாகுவார் தங்கம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஜாகுவார் தங்கத்தின் எதிரணியை சேர்ந்த ஏ.எம். ரத்னம் உள்ளிட்ட 15 பேர், செயற்குழு கூட்டம் கூட்டியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஜாகுவார் தங்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தயாரிப்பாளர் ஏ.எம் .ரத்னம் உள்ளிட்ட 15 பேரும் இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்