மாதம் ரூ.12 லட்சம் வருமானம் புனேவில் டீக்கடை வைத்து சம்பாதிக்கும் நபர்!
டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் மஹாராஷ்டிராவின் புனேவில், மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். யெவ்லே டீ ஹவுஸ் (Yewle Tea House) என்ற கடையின் உரிமையாளர் நவ்னத் யெவ்லே என்பவர் தமது டீக்கடைத் தொழிலை சர்வதேச அளவில் விஸ்தரிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறிப்பிட்ட பக்கோடா தொழிலை சுட்டிக்காட்டிய அவர் டீக்கடைத் தொழிலிலும் வேலைவாய்ப்பு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். தமது 3 கடைகளின் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாகவும், ஒவ்வொரு கடையிலும் 12 ஊழியர்கள் வீதம் 36 பேருக்கு தம் டீக்கடை மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நவ்னத் யெவ்லே கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.