அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் 2021-22 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகள் 22 சிகிச்சை பிரிவுகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமையவுள்ளது என்றும் தனியார் மருத்துவமனைகளை விட்டு, மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்