தென்னிந்தியாவில் முதல் முறையாக உலக அமைதிக்காக 100 அடி புத்தர் கோபுரம் திறப்பு ..!

தமிழகத்தில் முதன்முறையாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்புகிராமத்தில் ‘தமிழ்நாடு நிப்பொன் சன் மியொ ஹொஜி’ என்ற  புத்த அமைப்பு உலக அமைதிக்கான புத்த அமைதி கோபுரத்தை அமைத்து உள்ளது.

1இந்த கோபுரத்தின்  உயரம் 100 அடி ,  அடி விட்டம் 150 அடியாக உள்ளது. இந்தக் கோபுரத்தின் மேலே புத்தரின் சிறிய அளவிலான அஸ்தி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில்  மார்ச் 4-ம் தேதியான  இன்று திறக்கப்பட்டது.

இந்த  திறப்பு விழாவில் ஜப்பானில் இருந்து 30 புத்தமத குருக்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.