மக்களவையில் தொடர் அமளியால் 2 மணி வரை ஒத்தி வைப்பு..!

Default Image

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவை காலை துவங்கியதும் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

பின்னர் மக்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தற்போது 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்