ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு -நாளை விசாரணை

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது. 

உள்ளாட்சி துறை முறைகேடு தொடர்பான அறிக்கை அடிப்படையில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணைக்காக நாளை ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனால்  பிப்ரவரி 24-ஆம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க அளிக்க கோரியும்,வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் சார்பில்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில்,அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.நடைபெற்ற விசாரணையில்,வழக்கின் விசாரணை நாளை ( மார்ச் 4 ஆம் தேதி) ஒத்திவைத்தது நீதிமன்றம்.மேலும் அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk