வரலாற்றில் இன்று (மார்ச் 3) ! அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பிறந்த தினம்

Default Image

தோர்ச்யீ காண்டு  ஓர் அரசியல்வாதி ஆவார் .இவர் மார்ச்  3-ஆம் தேதி , 1955 -ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஏப்ரல் 9, 2007 அன்று கெகோங் அபாங்கிற்கு மாற்றாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறாவது முதலமைச்சராக பதவியேற்றார்.2009 ஆண்டு தேர்தல்களில் தனது கட்சிக்கு வெற்றி தேடித்தந்து மீண்டும் 25 அக்டோபர் 2009 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இவர் மோன்பா இனத்தைச் சேர்ந்தவர். மறைந்த லேகி டோர்ஜீயின் மகன். இவருக்கு நான்கு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இந்தியப் படையின் உளவுத்துறையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். வங்காள தேச விடுதலைப் போரின்போது இவராற்றிய உளவுப்பணிக்காக தங்கப் பதக்கம் பெற்றார். ஏப்ரல் 30, 2011-ஆம் ஆண்டு விமான விபத்தில் ஷீலா-பள்ளத்தாக்கில் மரணமடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்