#Breaking: தமிழகத்தில் இரு தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர்.இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்