அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட புனிதத் தலங்களில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கோலாகலம்!

Default Image

புனிதத் தலங்களான குருதுவாராவில்  ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான சீக்கியர்களின் ராணுவப் படையை அமைத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புத்தாண்டும் இந்த நாளிலிருந்துதான் தொடங்குகிறது.

இந்தப் புனித நாளை முன்னிட்டு வண்ண மயமான ஆடைகளுடன் ஏராளமான சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குத் திரண்டனர். ஒளிவீசும் மின்விளக்குகளால் பொற்கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போன்று பஞ்சாபில் உள்ள அனந்தபுர் சாகிப் குருதுவாராவிலும் ஹோலா மொஹலா கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்