டெல்லி வன்முறை- கைது செய்யுங்கள் பாஜக தலைவர்களை..நேற்று உத்தரவு..!இன்று நீதிபதி அதிரடி இடமாற்றம்

Default Image

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தலைநகர் டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி நீதிமன்ற நீதிபதி முரளிதர் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கொலீஜியம் கூறுகையில் கடந்த பிப்.12ல் நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படியே  இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை நள்ளிரவில் நீதிபதி தல்வந்த் சிங்குடன் விசாரித்தவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர்  என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நீதிபதி முரளிதர் வன்முறை தொடர்பாக சர்ச்சைகுரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார்.இந்நிலையில் ஒரே நாளில் அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்