வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்-தாய்மொழி தினத்தில் ஸ்டாலின் ட்வீட்

Default Image

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று தாய்மொழி தினத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

உலக தாய் மொழி தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.உலக தாய்மொழி தினமாக  முதன்முறையாக 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் கொண்டு வரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தினம் மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது யுனெஸ்கோ. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கருத்துகள் இந்த தினத்தில் முன்வைக்கப்படும்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம். தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு. தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்