தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும்.! பிரபல நடிகையின் பளிச் பேட்டி.!

Default Image
  • காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும் என அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தா தெரிவித்தார்.

கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் ஒன்றாக இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சமந்தா அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என சமந்தா தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும், அதற்கான படப்பிடிப்பை தொடங்க மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய பங்கு படத்திற்கு வலுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri