திருப்பூர் விபத்து : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Default Image

திருப்பூரில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 20 பேர் இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில்  ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து கடும் துயரம் அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்