சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம்.!

Default Image
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண் மண்டல தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக துணை தலைவர் வலியுறுத்தினார். இதனால் திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். அதன்படி இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது வேளாண் மண்டல தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக துணை தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

இதையடுத்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் திட்டத்தை கொண்டுவருவீர்கள்.! நாங்கள் வலியுறுத்த வேண்டுமா.? என கேள்வி எழுப்பினார். பின்னர் சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் நீங்கள்தான் நெருக்கமாக இருக்கிறீர்கள் என திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்