#DelhiElectionResults : தலைநகரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தட்டி தூக்கிய ஆம் ஆத்மி

Default Image

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில்  தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.அதன்படி   ராமகிருஷ்ணபுரம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பிரமிளா தோகஸ் 3718 வாக்குகள் பெற்று முன்னிலை  பெற்றுள்ளார்.கரோல் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் விஷேஷ் ரவி  4722 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திரிலோக்புரி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ரோஹித் குமார் 14328 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்