இன்று முதல் கிடுகிடுவென உயர்கிறது மதுபானங்களின் விலை..!!விலை விபரம் இதோ

Default Image
  • தமிழகத்தில் இன்று முதல்   மதுபானங்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • 6 ஆண்டுகள் கழித்து உயர்கிறது பீர் முதலிய மதுபாணங்களின் விலை.

தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள்  இன்றளவும் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் மூடுவதற்கு வழி தேடினால் மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் இயக்குவதில்  அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் தான் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  இனிமேல் பீரின் விலை ரூ10,  ஒரு ஆஃப் விலை ரூ20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ10, ஒரு ஃ புல் விலை ரூ40 என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வைப்போல கடந்த 2017ல்விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் பீர் விலையானது கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala