கொரோனா வைரஸ் பாதிப்பு ! 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பு- அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பதே அதிகாரப்பூர்வ தகவல் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சீனாவில்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால்  உலகின் பிற நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த  கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் தினமும் உயிரிழப்பு  அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் இந்த வைரஸ் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கொரோனா வைரஸ் அறிகுறி எதுவுமில்லை தமிழகத்தில் மருத்துவத்துறை கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவுமில்லை.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதாக யாரும் கண்டறியப்படவில்லை.கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பதே அதிகாரப்பூர்வ தகவல் ஆகும்.கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்