வீட்டின் அறையில் கணவன்,மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக கிடந்த அதிர்ச்சி தகவல்.!

- சென்னை வியாசர்பாடியில் மகள் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது.
- ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் என்பவரும் தங்கள் மகள் குணவதியின் திருமணத்துக்காக பெற்ற 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது மகன் அரிகரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு செல்ல இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கரிகாலன், முனியம்மாள் ஆகியோர் வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் முனியம்மாளின் சகோதரரான மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் என்பவரும் உணவில் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025