மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 நிதியாண்டில் கல்வித்துறைக்கு ரூ .99,300 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் . மத்திய அரசு விரைவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் என்றும், இது குறித்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் பொறுப்பேற்ற பின்னர் புதிய கல்விக் கொள்கையின் வரைவு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது என்றார் .மேலும்  திறன் மேம்பாட்டிற்காக ரூ .3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.