47 ஆண்டுகளில் யாரும் செய்யாததை செய்து புதிய கவுரவம் பெற்ற டிரம்ப்.!

Default Image
  • வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது.
  • இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  டிரம்ப் பெற்றார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கி கடந்த 1974-ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இந்த பேரணி நடைபெற்றபோது ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ரொனால்டு ரீகன் ஆகியோர் மட்டுமே தொலைவிலிருந்து உரையாற்றி உள்ளனர். தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2017-ம் ஆண்டு நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இதில் கலந்துகொண்ட முதல் துணை ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றார்.

47 -வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  கலந்து கொண்டு பேசினார்.அதில்  நாம் ஒரு எளிய காரணத்திற்காக இங்கே கூடியிருக்கிறோம். உலகில் பிறந்த மற்றும் பிறக்காத ஒவ்வொரு குழந்தையும் கடவுளால் கொடுக்கப்பட்ட திறனை பூர்த்தி செய்வதற்காக கூடியுள்ளோம். என கூறினார்.

இந்த பேரணி கூட்டத்தில் டிரம்ப்  கலந்து கொண்டது பொதுமக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. மேலும் இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  டிரம்ப் பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்