பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம்..! கருத்தில் இருந்து பின்வாங்கிய அமைச்சர் பாஸ்கரன்

Default Image
  • பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 
  • தனது கருத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் பின்வாங்கியுள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக மக்களவை தேர்தலில் இருந்து கூட்டணி வைத்து வருகிறது. அதிமுக -பாஜக கூட்டணி இடையே பீதியை ஏற்படுத்தும்,வகையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விழா நடைபெற்றது.இந்த விழாவில் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் அமைச்சரவையிலே  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

எனவே அமைச்சரின் இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரின் சொந்தக்கருத்து.அதிமுகவின் கருத்து இல்லை என்று கூறினார்.இந்நிலையில் தனது கருத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் பின்வாங்கியுள்ளார்.அதாவது தற்போது அவர் கூறுகையில், அதிமுக – பாஜக கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது என்று தனது கருத்தை மாற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்