பேடிஎம் நிறுவனம் வாட்ஸ் ஆப்க்கு எதிராக போர்கொடி!

Default Image

வாட்ஸ் ஆப்  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் போர்கொடி உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான முக்கிய செயலியாக பேடிஎம். உள்ளது.

தற்போது இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் கையில் எடுத்து அதற்கான சோதனை முயற்சியை இந்தியாவில் தொடங்கியது.

ஆனால் இதில் லாக் இன் மற்றும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.

இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து தேசிய பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கான கழகத்திடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்