தர்பார் படத்திற்கு இந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் அனுமதி .!

Default Image
  • “தர்பார்” படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்.
  •  “தர்பார்” திரைப்படத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரில் தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை நாள்களில் மட்டுமே அனுமதி பெற்று அதாவது 5-வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையிட முடியும்.

ஆனால் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் விடியற்காலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிட உள்ளனர். எனவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அவர் புகார் தெரிவித்து இருந்தார்.சிறப்பு காட்சிகள் திரையிட முறையான அனுமதி கேட்டால் அனுமதி கொடுக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது “தர்பார்” திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி 09,10,13 மற்றும் 14 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்