ஆண்டின் முதல் கூட்டத்தொடர்- நாளை கூடுகிறது

Default Image
  • ஆண்டுதோறும் ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.
  • அந்த வகையில் இந்த ஆண்டு  நாளை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு நிறைவு பெற்று அடுத்து 2020 ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில்  தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் .

எனவே தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 6ஆம் தேதி காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது  குறித்து வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்