மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் -சர்ச்சையாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி புகார்

Default Image
  • போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார்.
  • இந்த விவகாரத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.மாணவர்களும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள்.

இதற்கு இடையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டுவீசுவோம் என்று சமீபத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசினார்.இவர் இவ்வாறு பேசியது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே ஹெச்.ராஜா  இவ்வாறு பேசியது குறித்து  நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.இந்த  புகாரில், ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்