வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பு – தேர்தல் ஆணையர்

Default Image
  • வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 
  • மேலும் எந்த பாரபட்சமுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகின்ற 6 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தேர்தல் முறைகேடு எங்காவது நடைபெற்றுள்ளது என உரிய ஆதாரத்துடன் புகார் வந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 90% தேர்தல் முடிவுகள் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சில வழிமுறைகள் எடுக்க வேண்டி உள்ள காரணத்தால் அதனை விரைவில் முடித்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூறியுள்ள புகார்கள் மீது எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்