போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் இல்லை- தமிழக அரசு எச்சரிக்கை.!

  • வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.
  • இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டு உள்ளது.

வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் அரசுப் பணியை தனியாருக்கு மாற்றக்கூடாது,  ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டால் ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விடுப்பு மற்றும் முன்னதாக பெறப்பட்ட  விடுப்புகள் தவிர, வேறு யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
murugan