நள்ளிரவில் தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் . 

Default Image
  • நள்ளிரவில் தேர்தல் ஆணையத்திடம் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் .
  • ஜனநாயக படுகொலை நடந்திருப்தாகவும்  வெற்றியை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது இதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்றார்.

திமுக முன்னணியில் இருக்கும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாகவும்   மீண்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி  ,ராமநாதபுரம் ,கரூர், கடலூர் போன்ற இடங்களில் வெற்றி பெற்றும் சான்றிதழ் தர மறுத்து வருகின்றனர் என்றும் ஜனநாயக படுகொலை நடந்திருப்தாகவும் , திமுக வெற்றியை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது அதற்க்கு  தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்த எந்த புகார்க்கும்  நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக எந்த எந்த பகுதிகளில் வெற்றி பெறப்போகிறோம் என்று தெரிந்து முடிவுகள் நிறுத்தப்பட்டு, அதன் பின்பு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது .

நாங்கள் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  தர்ணாவில் ஈடுபடுவது உறுதி என்றும் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறதா என்பதை பார்ப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில்  திமுக தொடர்ந்த வழக்கை  உயர்நீதிமன்ற அவசர வழக்காக நீதிபதிகள்  விசாரிக்க மறுத்துவிட்டனர்.ஆனால் அதில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் மேலும் ஆணையம் இன்று  மாலை 4  மணிக்குள் எழுத்துபூர்வமாக  அறிக்கை அளிக்க வேண்டும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து மாலையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் இரவு புகார் ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்