குடியுரிமை  திருத்த சட்டம் : என்ன நடந்தாலும் பின்வாங்கப் போவதில்லை – அமித் ஷா

Default Image
  • குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • பின்வாங்கப் போவதில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக வந்தாலும் ஒரு அங்குலம் கூட பின்வாங்கப் போவதில்லை .எதிர்க்கட்சிகள் எவ்வளவு தவறான செய்தியை பரப்ப முடியுமோ அவ்வளவு தவறான செய்தியை பரப்பி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்