‘அல்கஹாலை’ பயன்படுத்தி அறுவை சிகிச்சை.! பரிதாபமாக உயிரிழந்த நோயாளி.!

  • ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி உயிரிழந்த கொடூர சம்பவம்.
  • மின்சாரமும் அல்கஹாலும் சிகிச்சையின் போது பயன்படுத்தியதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.

ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது, பெரிய பரபரப்பை கொடுத்தது. ரோமானியா மருத்துவமனை ஒன்றில் ஒருவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் மின்சாரமும் அல்கஹாலும் அறிவியல் படி இரண்டும் சேர்த்ததால் நோயாளி மீது திடீரென தீ பற்றியது. பின்னர் அதன் காரணமாக அவருக்கு உடல் முழுவதும் அங்கங்கே எரிந்து காயம் ஏற்பட்டு, ஏற்கனேவே சிகிச்சைக்காக வந்த அவர் திடீரென இந்த சம்பவத்தால் பரிதமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.