இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பதவியேற்றார்!

Default Image
  • முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • அதனை தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே நியமிக்கப்பட்டுள்ளார். 

ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள ராணுவ தளபதி பதவிக்கு மனோஜ் முகுந்த் நராவனே நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ராணுவ தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்